8000கும் அதிகமான போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலை மன்னிப்புக் கேட்கும் செர்பியா நாடாளுமன்றம்












இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் வன்கொடுமையாகக் கருதப்படும் 1995 போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலைக்காக செர்பியா நாடாளுமன்றம் மன்னிப்புக் கேட்டுள்ளது. இருப்பினும் செர்பிய நாடாளுமன்றத்தில் இந்த மன்னிப்புக்கான முன்மொழிவு வெறும் இரண்டு வாக்குகள் வித்தியாசத்திலேயே நிறைவேற்றப்பட்டது.

8000க்கும் அதிகமான போஸ்னிய முஸ்லிம்களை போஸ்னிய செர்பியப் படைகள் அப்போதைய செர்பிய அதிபர் சுலோபோடான் மிலோசெவிச்சின் உத்தரவின் பேரில் கொன்று குவித்தன என்பது அறிந்திருக்கலாம். மிலோசெவிச்சிற்குப் பிறகு பதவி ஏற்ற எந்த ஓர் அரசும் இப்படுகொலை குறித்து வருத்தம் தெரிவிக்கவோ, படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மீள் குடியிருப்பு அளிக்கவோ செய்யவில்லை என்பதும் நாடாளு மன்ற வாக்கெடுப்பில் அலசப்பட்டது.

இருப்பினும் இந்த மன்னிப்பு ஒரு நாடகம் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்ப்பந்தத்துக்காக நடத்தப்பட்ட கண்துடைப்பு என்றும் படுகொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த போஸ்னியர் ஒருவர் தெரிவித்தார். இந்த வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், "செர்பியா இப்படுகொலைக்காக வருத்தம் தெரிவிப்பது வெட்கக் கேடானது" என்று தெரிவித்தார். வெளிமிர் எலிக் என்ற இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதே கருத்தைத் தெரிவித்தார். "மறந்து போன நிகழ்வை மீண்டும் நினைவுபடுத்துவது போல இந்த வாக்கெடுப்பு உள்ளது" என்று கூறினார்.

1995-ல் போஸ்னியாவில் கலவரம் வெடித்த போது, ஐநா கட்டுப்பாட்டில் குறிப்பிட்ட அபயப் பகுதிக்குள் இருந்த ஆயுதங்களற்ற பொதுமக்களை போஸ்னிய செர்பிய இராணுவம் மிலோசெவிச்சின் உத்தரவின் பேரில் கொன்றுகுவித்தது இன்றும் அழியா நினைவில் உள்ளது.

அல்லாஹ்வின் அத்தாட்சிகள் அற்பமானவையா???

கேள்வி: தங்களின் பார்வைக்கு மரம் ருகூவு செய்வது மீன் வயிற்றில் அல்லாஹ் என்றும் முஹம்மது என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மன் நாட்டில் ஒரு மரத்தில் (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்ற அரபி பதம் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த புகைப் படங்களும் உள்ளன. இது போன்ற விஷயங்களை நம்பலாமா?


பதில்: இறைவன் தனது அத்தாட்சிகளைக் காட்டுவான் என்பதிலோ, அவற்றை நம்ப வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மாயையையும், மாயத் தோற்றங்களையும் அத்தாட்சிகள் என்று கூறுவோர் தான் இவை அத்தாட்சி என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.


தற்செயலாக அமைந்த இது போன்றவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என வாதிட்டால் எல்லா மதத்தவர்களிடமும் இதுபோன்ற அத்தாட்சிகள் அதிகமதிகம் உள்ளன. சிலுவை, மேரி வடிவத்தில் பல்லாயிரம் பொருட்கள் உள்ளன. எல்லா மதத்தினரும் தற்செயலாக அமைந்து விட்ட இது போன்ற காட்சிகளைக் காட்டுகின்றனர். உங்கள் வாதப்படி இவையும் அத்தாட்சிகள் தாமா?




இதோ வணக்கம் செய்யும் மரம் என்று நீங்கள் கூறினால் கும்பிடுவது போல தோற்றமளிக்கும் மரங்களை அவர்கள் காட்டுவார்கள். அல்லாஹ் என்ற அரபு எழுத்து எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் காட்டினால் இல்லை சூலம் தான் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுவார்கள். இறைவனின் அத்தாட்சிகள் இவ்வளவு பலவீனமாக, வமையற்றதாக ஒருக்காலும் இருக்க முடியாது.


அத்தாட்சிகள் என்பன, ஒரே இறைவன் இருக்கிறான் என்பதைத் தெளிவாக அறிவிக்கும். நீங்கள் கூறுபவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் பல கடவுள் உள்ளனர் என்பதற்கும் இது போன்ற அத்தாட்சிகளை (?) மற்றவர்கள் காட்டுவார்கள்.


அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனது அத்தாட்சிகள் பற்றிய அறிவும் இல்லாதவர்கள் தான் மாயைகளை அத்தாட்சிகள் என்பர்.

மூஸா நபி இலேசாக பாறையில் தட்டியவுடன் தண்ணீர் பீறிட்டு அடித்தது. இது போல் எவரும் செய்ய முடியாது என்பதால் இதை அத்தாட்சி எனலாம்.


வானங்கள், பூமி, சூரியன், கோள்கள், மழை மேகங்கள், விண்மீன்கள், காற்று, பயிர்கள் முளைப்பது, கருவில் மனிதன் வளர்வது, மனிதனுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள வியக்க வைக்கும் அற்புதங்கள் என கோடானு கோடி அத்தாட்சிகளை அல்லாஹ் காட்டிக் கொண்டே தான் இருக்கிறான்.


இத்தகைய பிரம்மாண்டமான மலைக்கச் செய்யும் அத்தாட்சிகளை விட்டு விட்டு அற்பமானவைகளை அத்தாட்சி என்று கூறுவது முற்றிலும் தவறாகும். கோடி கோடியாக செல்வம் வைத்திருப்பவன் செல்லாத காலணாவைப் பெரிதாக நினைப்பது போலவே இவர்களின் நிலைமை அமைந்துள்ளது.


இத்தகைய அற்பமான தற்செயலானவற்றை அத்தாட்சி என்று கூற ஆரம்பித்தால் நிச்சயம் நீங்கள் தோற்று விடுவீர்கள்! இது போன்ற செல்லாக்காசுகள் உங்களை விட மற்றவர்களிடம் மூட்டை மூட்டையாகக் குவிந்துள்ளன.

இவை அத்தாட்சி இல்லை என்று நம்மிடம் ஆதாரம் கேட்கக் கூடாது. யார் அத்தாட்சி என்று வாதிடுகிறார்களோ அவர்கள் தான் இது போன்றவைகளை அத்தாட்சிகளாக இறைவன் கூறியிருக்கிறான் என்ற ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.


பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

அல்லாஹ்வின் அழகிய ஆலயங்கள்...


Masjid al-Haram, Mecca, Saudi Arabia
Al-Masjid al-Nabawi
Al-Aqsa Mosque, Jerusalem
Faisal Mosque, Islamabad, Pakistan
Baitul Mukarram, Bangladesh
Sultan Ahmed Mosque, Istanbul
Grozny Central Dome Mosque
Masjid Negara, Malaysia
Sheikh Zayed Mosque
Sultan Qaboos Grand Mosque, Oman
Masjid e Tooba (Gol Masjid), Karachi, Pakistan






உங்கள் FACEBOOK கை மிக மிக இலகுவாக பயன் படுத்த Facebook shorcut keys


இந்த கணினி உலகில் பேஸ்புக் பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே.
அந்த அளவுக்கு உலகில் பேஸ்புக் இணையதளம் மக்களிடையே அபரிமிதமான வளர்ச்சியை பெற்று உள்ளது. நம்மில் கூட பெரும்பாலானோர் பேஸ்புக் உபயோக படுத்துகிறோம். இது உபோயோகிப்பதர்க்கு சுலபமாக இருக்கும். இதை மேலும் சுலபமாக்க இங்கு பேஸ்புக்கின் முக்கியமான சில shortcut key கொடுத்துள்ளேன் உபயோகித்து பாருங்கள்.





இந்த shorcut keys கூகுள் க்ரோமில் மட்டுமே வேலை செய்கிறது.

Keyboard Shortcuts
Function
ALT + 1முகப்பு பக்கம்
ALT + 2சுய விவரம்
ALT + 3நட்பு கோரிக்கைகள்
ALT + 4நமக்கு வந்த அஞ்சல்கள்
ALT + 5அறிவிப்புகள்
ALT + 6எனது கணக்குகள்
ALT + 7PRIVACY SETTING
ALT + 8OFFICIAL FACEBOOK PAGE
ALT + 9TERMS AND CONDITIONS
CTRL + FVIEW SOURCE PAGE
CTRL + HBOOK MARK
CTRL + OREFRESH
CTRL + PSELECT ADDRESS BAR
CTRL + RPRINT THE PAGE
CTRL + SSAVE PAGE
CTRL + YFIND

கடவுள் காலமானார்!!! கடவுளின் கடந்த கால கராமத்துகள்...


உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட சாய்பாபாவின் உயிர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு உடலை விட்டு பிரிந்தது.

கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், இரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இதனை சாய் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

கடவுளின் கடந்த கால கராமத்துகள்....



வியக்க வைக்கும் வித்தியாசமான உலகின் அதி நவீன கட்டிடங்கள்...


Longaberger Basket Building. Newark, USA

Wonder works. Pigeon Forge, United States

Dynamic Tower in Dubai. Tower, whose every floor is moving on its own axis, independently of the others. The first building that can change its shape. Still under construction.

Calakmul building - a building in a giant washing machine. Mexico

Bull ring. Birmingham, United Kingdom


Church of hallgrimur (Lutheran Church) in Reykjavik, Iceland

The public library in Kansas City, USA

Montreal biosphere. Montreal, Canada

Milwaukee Art Museum (Museum of Art, Milwaukee). Milwaukee, USA

Atomium in Brussels, Belgium

டுபாயில் காளை மாட்டின் `செல்' மூலம் குளோனிங் ஒட்டகம் உருவாக்கம்.


டுபாயில் உள்ள குளோனிங் ஆய்வகத் தில் ஒட்டகம் ஒன்று உருவாக்கப்பட் டுள்ளது. கடந்த ஆண்டு இந்த மையத்தில் முதலாவது ஒட்டகம் குளோனிங் முறையில் உரு வாக்கப்பட்டது. தற்போது இரண்டாவது ஒட்டகம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆண் ஒட்டகமாக உருவாக்கப் பட்ட இதற்கு `பின் ஸெகான்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 383 நாட்களுக்குப் பிறகு இது உரு வானது. காளை மாடு ஒன்றின் `செல்' மூலம் இந்த ஒட்டகம் உருவாக்கப்பட் டுள்ளது. முதல் முறையாக உயிருடன் உள்ள ஒரு விலங்கின் செல்லிலிருந்து குளோனிங் முறையில் ஒட்டகம் உருவாக் கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இறந்த ஒட்டகத்தின் கரு செல் மூலம் ஒட் டகம் உருவாக்கப்பட்டது. அப்போது பெண் ஒட்டகம் உருவானது. இதற்கு `இன் ஜாஸ்' என பெயரிடப்பட் டது. இந்த ஒட்டகம் நல முடன் உள்ளதாக விஞ் ஞானிகள் தெரிவித்தனர். தோல் செல் மூலம் கரு உருவாகி அதன் மூலம் ஒட்டகம் குளோனிங் முறையில் எளிதாக உரு வாக்கப்பட்டதாக இம் மையத்தில் உள்ள விஞ் ஞானிகள் தெரிவித்தனர். டுபாயில் உள்ள குளோனிங் ஆய்வு மையம் 21 ஆண்டுகளுக்கு முன் உருவாக் கப்பட்டது. இம் மையம் 2008ஆம் ஆண்டு கரு நுண்ணுயிரி பெருக்கம் மூலம் இரட்டை ஒட்டகக் குட்டிகளை உரு வாக்கி சாதனை படைத்தமை குறிப்பிடத் தக்கது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி திரைப்படம்.......

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி திரைப்படம் எடுத்தால் என்ன? இசை இல்லாமல் முகம் காட்டாமல் எடுக்கலாமே? இதனால் அனைத்து சமுதாய மக்களுக்கும் எளிதில் புரியுமே?

பதில்-

திரைப்படங்கள் எடுத்து தங்கள் மதத்தைக் கொண்டு செல்ல முயன்றவர்களால் அதில் முழு வெற்றி பெற முடியவில்லை. இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்து தங்கள் ஒரிஜினாலிட்டியை தாங்களே அழித்து விட்டனர்.

ஆனால் 1400 ஆண்டுகளாக உருவப்படம் இல்லாமல் சிலை இல்லாமல் நாடகம் சினிமா இல்லாமல் நபிகள் நாயகம் குறித்த செய்திகள் சரியான முறையில் மக்களைச் சென்றடைந்து கொண்டு தான் உள்ளது.

தனது சமரசம் செய்து கொள்ளாத கொள்கை மூலம் இம்மார்க்கம் அதன் தூய வடிவில் சென்று கொண்டு தான் இருக்கிறது.

இது போன்ற திரைப்படங்கள் இல்லாமல் தான் இந்த மார்க்கம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றவுடன் சிவாஜி கனேசனின் தோற்றம் நினைவுக்கு வருவது போல் நபிகள் நாயகத்தின் நிலை ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது.

முகம் காட்டாமல் த மெஸஞ்சர் என்ற படம் எடுக்கப்பட்டது. அதில் முக்கால் வாசி பொய்யும் கால்வாசி உண்மையும் இருந்தாலும் அதற்கு எதிராக யாரும் வாய் திறக்காமல் அதையும் பார்த்து ரசித்தனர். நபிகள் நாயகத்தின் மீது இட்டுக் கட்டுகிறார்களே என்ற கோபம் யாருக்கும் வரவில்லை.

மேலும் நபிகள் நாயகத்துக்கு மட்டும் உருவத்தைக் காட்டாவிட்டாலும் ஹம்ஸா என்பவரை அதில் கதாநாயகனாக காட்டினார்கள். அத்தனையும் பொய் என்பது தனி விஷயம். இதனால் ஏற்பட்ட விளைவு என்ன? ஹம்ஸா என்றவுடன் அதில் நடித்த நடிகன் தான் இன்றும் மனதில் நிழலாடுகிறான். அவரது ஒரிஜினாலிடி இல்லாமல் போய் விட்டது.

மேலும் சினிமா என்றாலே அது வரலாறாக இருந்தால் கூட ஐந்து விழுக்காடு உண்மையுடன் 95 விழுக்காடு பொய் கலக்க வேண்டும். இல்லாவிட்டால் அது எடுபடாது. உள்ளது உள்ளபடி எடுத்தாலும் சினிமாவுக்காக கூட்டிக் குறைத்து எடுத்திருப்பார்கள் என்று தான் முஸ்லிமல்லாத மக்கள் நினைப்பார்கள். இதனால் நபிகள் நாயகத்தின் மதிப்புக்குப் பங்கம் தான் ஏற்படும்.

பேச்சாக எழுத்தாக சொல்வதை மட்டும் மனித உள்ளம் சிந்தித்து உள் வாங்கும். இசையாக, நாடகமாக, கதையாகச் சொல்வதை காதும் கண்ணும் தான் ரசிக்குமே தவிர உள்ளத்தை அது அறவே ஈர்க்காது. இது தான் மனோதத்துவ முடிவாக உள்ளது.

நான் ஒரு குடிகாரன் என்று ஒருவன் ஒப்புதல் வாக்கு மூலம் தந்தால் அவனை நாம் காரித் துப்புகிறோம். ஆனால் கோப்பயிலே என் குடியிருப்பு என்று அதையே அவன் பாடலில் சொன்னால் அதை நாமே முனுமுனுக்கிறோம்.

நாம் மதிக்கும் மனிதன் திருடன் என்று தெரிய வந்தால் அவனை வெறுக்கிறோம். ஆனால் திரையில் திருடனாக கதாநாயகன் வந்தால் அவனுக்கு ரசிகர் மன்றம் வைக்கிறோம்.

குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்று சாதாரண நடையில் நாம் சொன்னால் நம்மை அடிக்க வரும் மார்க்க அறிவற்றவர்கள் ஒரு கையில் இறை வேதம் மறு கையில் நபி போதம் இருக்கையில் நமக்கென்ன கலக்கம் என்ற பாடலை முனுமுனுக்கிறார்கள். இதில் இருந்து இவை உள்ளங்களில் இறங்குவதில்லை என்பதை அறியலாம். எனவே இது போன்ற வழிமுறைகளில் சொல்லப்படும் எந்தக் கருத்தாக இருந்தாலும் அது கண்ணையும் காதையும் தான் ஈர்க்கும். நிச்சயம் உள்ளத்தை ஈர்க்காது.

http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/nabikal_patri_sinima_edukalama/


Related Posts Plugin for WordPress, Blogger...

Join stils3g Facebook Friends