உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட சாய்பாபாவின் உயிர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு உடலை விட்டு பிரிந்தது.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், இரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இதனை சாய் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
கடவுளின் கடந்த கால கராமத்துகள்....