*ஒரு முறை ரஷ்ய நாட்டுத் தலைவர் போலந்துக்கு சென்றிருந்தார். அவருக்கு மரியாதை
செலுத்தும் முறையில் 24 பீரங்கிகள் முழங்கின. அவற்றின் முழக்கம் முடிந்த பின்பு
ஒரு மூதாட்டி சுட்டவர்களை அணுகி காரணம் கேட்டார்.
*ரஷ்ய தலைவர் வந்திருக்கிறார் அதற்காகத்தான் சுட்டோம் என்றார் ராணுவ வீரர்கள்.
* இத்தனை தடவை சுட்ட பிறகும் உங்கள் குறி தவறிவிட்டதே என்று பதில்
கூறினாள் அந்த மூதாட்டி.
....................................................................................................................................................
*எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
*எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.
....................................................................................................................................................
*போராட்டத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் கட்டித் தழுவிக்கிறாங்களே ஏன்?
*நாடு தழுவிய போராட்டமாம்.
....................................................................................................................................................
*தலைவர் உருக்கமா பேசியும், தாய்க்குலமெல்லாம் கண்ணீர்
விட லைங்கிறதுக்கு இப்படியா பண்ணுவார்?
*என்ன பண்ணினார்?
* கண்ணீர் புகைக் குண்டு வீசிட்டார்.
....................................................................................................................................................
*மீட்டிங்லே பேச வந்த தலைவர் ஏன் டென்ஷனா உட்காந்திருக்கார்?
*போஸ்டர்ல அஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்றதுக்குப் பதிலா,
கஞ்சா நெஞ்சன்னு பிரிண்ட் பண்ணிட்டாங்களாம்.
....................................................................................................................................................
*தலைவர் முன்னாடி ரவுடியா இருந்திருக்கலாம்.
அதுக்காக தொண்டர்கள் இப்படியா பண்ணறது?
*என்ன பண்ணாங்க?
-அவருக்கு சைக்கிள் செயின் மாலை, சோடா பாட்டில் மாலை போடுறாங்க.
....................................................................................................................................................
*தலைவர் அடிக்கடி சோப்பு போட்டு கையை கழுவுறாரே, ஏன்?
*கறை படியாத கை என்று மக்களுக்கு காட்டனுமே.
....................................................................................................................................................
*ஊழல் பெருச்சாளிகளை பிடிக்க சொல்லி மேலிட உத்தரவு, என்ன பண்ணலாம்?
*நாலு பூனைகளை வாங்கிட்டு போகலாம் சார்.
....................................................................................................................................................
*தலைவரே...! மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க வாங்க ஓடிடலாம்...!
*இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சு இருக்கு...!
....................................................................................................................................................
*இது எந்த ஊரு? இதுக்கு முன்னாடி எப்பவோ இங்க வந்த மாதிரி இருக்கே?
*கொஞ்சம் மெதுவா பேசுங்க. இதுதான் நீங்க எம்.எல்.ஏ வாக ஜெயிச்ச
தொகுதி.
ஒபீஸ் நகைச்சுவை
*சார் உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?
*அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி.
................................................................................................................
*கிளார்க் ராமசாமி நிறைய லஞ்சம் வாங்குவாரோ?
*எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?
*அவர் சட்டையில ஏகப்பட்ட பாக்கெட் இருக்கே...! .................................................
*எங்க மேனேஜர் அமைதியா அஞ்சு நிமிஷம் கூட சீட்ல உட்காரவே மாட்டார்.
*அவ்வளவு சுறுசுறுப்பா?
*அவருக்கு மூல வியாதி.
...............................................................................................................
*வேலை செய்யும் நேரத்தில் சீட் ஆடி மேனஜரிடம் மாட்டியதும்,
மேனேஜர் ராமனின் சீட்டை கிழித்து விட்டார்.
*அப்புறம் என்ன ஆச்சி
*வேறு சீட் வாங்கி ஆடினார்கள்.
...............................................................................................................
*ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்கேள,
ஏன்?
*கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.
...............................................................................................................
*எங்க ஆபிஸ்ல வேலை செய்ற எல்லோரும் கை நீட்டி லஞ்சம் வாங்க மாட்டாங்க...!
*அப்படியா?
*ஆமா, நீங்க தான் கை நீட்டி லஞ்சம் கொடுக்கனும்..