மருத்துவ உலகை மிரள வைத்த பிரசவம்!!! இரட்டைக் குழந்தைகள்!!! இரண்டு அப்பா!!!

மருத்துவ உலகை மிரள வைத்த பிரசவம்!!! இரட்டைக் குழந்தைகள்!!! இரண்டு அப்பா!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறது கள்ளக்காதல். ஆளை தீர்த்துக் கட்டுவது, பழிவாங்க குழந்தையை கொன்று சூட்கேசில் அடைத்து வீசுவது.. என விளைவுகள்தான் வேறுபடுகிறது. போலந்திலும் இதேபோல ஒரு க.கா. சம்பவம். அதன் விளைவு.. யாரும் எதிர்பாராத அதிர்ச்சியை தந்திருக்கிறது. மருத்துவ உலகிலும் ஷாக் ஏற்படுத்தியிருக்கிறது. போலந்தை சேர்ந்த பெண் செலஸ்டின் (கற்பனை பெயர்).

கணவரிடம் அவருக்கு என்ன அதிருப்தியோ.. வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டது. கணவருக்கு தெரியாமல் க.காதலனுடனும் ஒரே நேரத்தில் குடித்தனம் நடத்தி வந்தார். கர்ப்பமான செலஸ்டினுக்கு சமீபத்தில் பிரசவம். இரட்டைக் குழந்தைகள். ஒன்று ஆண், இன்னொன்று பெண். கணவன் மீது விரக்தியில் இருந்த செலஸ்டின், ‘காதலன் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறதே’ என்ற சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்.

இதையே சாக்காக வைத்து கணவனை டைவர்ஸ் செய்துவிட்டு காதலனையே கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்தார். விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். குழந்தைகள் இரண்டும் க.கா. மூலம் பிறந்தது என்பதை நிரூபிப்பதற்கு டிஎன்ஏ ரிப்போர்ட் வேண்டுமே.. அதற்கும் விண்ணப்பித்தார். இரட்டையாக பிறந்த குழந்தைகளின் ரத்தம் எடுக்கப்பட்டு டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டது. டிஎன்ஏ ரிப்போர்ட்டும் வந்தது.

செலஸ்டினின் ஆசையில் பாதிதான் நடந்தது. ஆம்.. பெண் குழந்தைக்கு தந்தை க.காதலன். ஆண் குழந்தைக்கு தந்தை கணவன் என்றது டிஎன்ஏ ரிப்போர்ட். செலஸ்டினுக்கு ஷாக்கோ ஷாக். டாக்டர்களுக்கும்தான். ‘‘கணவனுக்கு தெரியாமல் காதலனுடனும் அவள் தொடர்ச்சியாக பழகி வந்திருக்கலாம்.

கருத்தரிக்கும் காலம் வந்ததும் அவளுக்கு இரு கரு முட்டைகள் உருவானபோது, கணவனுடன் உறவு கொண்ட சிறிது நேரத்துக்குள்ளாகவே காதலனுடனும் உறவு கொண்டிருக்கலாம். கணவன் விந்தணு ஒரு முட்டையிலும், காதலன் விந்தணு மற்றொரு முட்டையிலும் ஊடுருவி குழந்தை உருவாகியிருக்கிறது. மிகமிகமிக அரிதாகவே இப்படி நடக்கும். செலஸ்டின் விஷயத்தில் இது நடந்திருக்கிறது’’ என்கின்றனர் டாக்டர்கள்

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்:கேரள மாநிலத்தில் பாதிரியார் கைது

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவியின் சகோதரியின் மர்ம மரணத்திலும் இவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ப்ரீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி பிளஸ் 1 படித்து வந்தார். இவரது சகோதரி அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். இருவரும் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்தனர். இந்த பள்ளி, அங்குள்ள தேவாலய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.இங்கு பாதிரியாராக இருக்கும் ஜோசப் என்பவர், இந்த விடுதிக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்தாண்டு அக்டோபரில் மாணவி ப்ரீதா மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், அதே விடுதியில் தங்கி படித்த ப்ரீதாவின் தங்கை, பாதிரியார் ஜோசப் மீது பரபரப்பான புகார்களை தெரிவித்தார்.ஜோசப், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, அந்த மாணவி கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. மாறாக, புகார் தெரிவித்த மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, தனது தந்தையிடம் புகார் தெரிவித்த அந்த மாணவி, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சில பகீர் தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:பள்ளி விடுதிக்கு ஜோசப் அடிக்கடி வருவார். அவரின் பாதங்களை கழுவி விடும்படி கூறும் அவர், எங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வார். என் சகோதரியும் இதேபோன்ற பாதிப்பிற்கு ஆளானார். என் சகோதரியை கடந்தாண்டு அக்டோபர் 21ம் தேதி இரவில், சிலர் விடுதியில் இருந்து, காரில் அழைத்துச் சென்றனர்.நள்ளிரவில் திரும்ப கொண்டு வந்து காரில் விட்டனர். என் சகோதரி மிகவும் களைப்பாக காணப்பட்டாள். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். அதற்கு அடுத்த இரண்டு நாட்கள், அவள் சாப்பிடவில்லை.இதனால், விடுதி நிர்வாகியான பெண், அவளை கடுமையாக அடித்தார். இதேபோன்ற சித்திரவதை தொடர்ந்தது. ப்ரீதாவின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, என் தந்தை அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு பரிதாபமாக இறந்து விட்டாள்.இவ்வாறு அந்த மாணவி கூறினார்.

தற்போது இந்த வழக்கு விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜோசப் கைது செய்யப்பட்டு, உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.இருந்தாலும், ஜாமீன் கிடைத்ததை அடுத்து, அவர் வெளியில் வந்து விட்டார். மாணவி ப்ரீதா மரணம் தொடர்பாகவும், அதில் ஜோசப்புக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

சாதியை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு - அறிஞர் அண்ணா
உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்-
அறிஞர் பெர்னாட்ஷா

இஸ்லாத்தைப் பற்றி அறிஞர் அண்ணா இவ்வாறு கூறுகிறார், இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.






Related Posts Plugin for WordPress, Blogger...

Join stils3g Facebook Friends